×

காவிரி நீரை களவாடுகிறார் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அமைச்சர் ரகுபதி இன்று காலை அளித்த பேட்டி: மணல் குவாரி முறைகேடு குறித்து அமலாக்கத்துறை, மாவட்ட கலெக்டர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையின் போக்கு ஜூன் 4ம் தேதிக்கு பிறகு எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம். குஜராத் என்பது போதைப்பொருட்கள் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் வருகிறது. பின் அங்கிருந்து பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் கோட்டை விட்டு விட்டார். மேலும் புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், வயலுக்கும் கொண்டு செல்கிறார். அவரால் தான் பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு கூறினார்.

The post காவிரி நீரை களவாடுகிறார் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Minister ,Raghupathi ,Pudukottai ,
× RELATED காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி...